வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கூட்டம் இருந்ததால் ரயில் நிலையத்தில் தமிழக ரயில்வே காவல்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்வே காவல்துறையினர் கையில் ஒலிபெருக்கியுடன் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழில் ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு மேற்கொண்டனர். இன்று எர்ணாகுளத்தில் இருந்து டாட்டா நகர் செல்லக்கூடிய ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் காவல்துறையினரையும் மீறி ஓடும் ரயிலில் ஏறி பயணிகள் இடம் பிடித்தனர். மேலும் அடுத்தடுத்து செல்லக்கூடிய தன்பாத், ரத்தீசாகர் ஆகிய ரயில்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பண்டிகை காலங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?