திருப்பூர்: 8 வருடமாக தலைமறைவாக இருந்தவர் கைது

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராசு (வயது 51). இவர் அரசாங்கத்திடமிருந்து கடன் பெற்று தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்து விட்டு, கடன் வாங்கித் தராமலும், வசூலித்த பணத்தை திருப்பித் தராமலும் தலைமறைவானார். இதுகுறித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் செல்வராசைத் தேடி வந்தனர். இந்நிலையில் செல்வராசு சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரைக் கைது செய்தனர். பண மோசடி வழக்கில் செல்வராசு 8 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி