திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற வரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசாதுல் இஸ்லாம் (வயது 23) என்பதும், அவரிடம் 50 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் அவரை கைது செய்தனர்.