திருப்பூர்: மல்லிகைப்பூ கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு விற்பனை

திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் கொள்முதல் செய்யப்படும் ஊர்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாகவும், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டியும் நேற்று (ஜனவரி 10) திருப்பூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகமாக இருந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,600 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டது. 

இதேபோல் முல்லைப்பூ ரூ.1,200 முதல் ரூ.1,400-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000, காக்கடா ரூ.800 முதல் ரூ.1,000, பட்டுப்பூ ரூ.160, சம்பங்கி ரூ.200, செவ்வந்திப்பூ ரூ.240, அரளிப்பூ ரூ.400, ரோஜாப்பூ ரூ.200 முதல் ரூ.400 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலான பூக்களின் விலை அதிகமாக இருந்ததால் பூ விற்பனை சற்று மந்தமாக இருந்தது.

தொடர்புடைய செய்தி