திருப்பூர்: பல லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ரயிலில் இருந்து இறங்கி வந்த வட மாநில இளைஞர் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றார். இதனைத் தொடர்ந்து அவரை விரட்டிப் பிடித்த போலீசார் அவரிடம் சோதனை மேற்கொண்டபோது போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கொண்டு வந்த போதைப் பொருளை சோதனைக்கு அனுப்பியபோது அது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெராயின் என்பது தெரிய வந்தது.

 மேலும் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் பீகாரைச் சேர்ந்த விகாஷ் குமார் 20 என்பவர் நியூ திருப்பூர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் கடந்த ஓர் ஆண்டாக பணியாற்றி வந்ததும், தற்போது ஊருக்குச் சென்று விட்டு திரும்பி வரும்போது ஹெராயின் போதைப் பொருளை விற்பனைக்கு வாங்கி வந்ததும் தெரியவந்தது. மேலும் இவருக்கு உதவியாக செயல்பட்ட பீகாரைச் சேர்ந்த அபிஷேக் 25 என்பவரையும் நியூ திருப்பூர் பகுதிக்கு சென்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி