திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையம் முன்பு உள்ள தபால் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், 50 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. சந்தோஷ் சிங் (வயது 40) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.