அதனைத் தொடர்ந்து ஐந்து நபர்களையும் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மதுரையைச் சேர்ந்த அசோக் (32) என்பவர் பெங்களூரில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தாபெட்டமைன் என்ற வலிநிவாரணி மருந்துகளை வாங்கி வந்து திருப்பூரில் உள்ள தனது நண்பர்களான தினேஷ்குமார், ரங்கராஜ், மணிகண்டன், சதீஷ்குமார் ஆகிய 4 பேருடன் சேர்ந்து தனியார் விடுதியில் தங்கி மெத்தாபெட்டமைன் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த போதைப்பொருட்களையும் அதற்குப் பயன்படுத்திய ஊசிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குறிப்பிடத்தக்கது என்னவென்றால், மெத்தாபெட்டமைன் போதைப்பொருள் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை போன்ற சமயங்களில் மட்டுமே பயன்படுத்தும் வலிநிவாரணி என்பதே ஆகும்.