திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டம் குமாரலிங்கம் பகுதியில் அமராவதி நீர் பாசன திட்ட பழைய வாய்க்கால் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் நோய்தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிருடன் வந்து இழப்பீடு கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு நெற்பயிற் சாகுபடி செய்த நிலையில் குலை நோய், தண்டுஅழுகல் நோய் காரணமாக கடும் இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த ஆண்டு முதல் சாகுபடியில் குருத்துப்புழு, தண்டுப்புழு, பருவமழை பாதிப்பால் கால்நடை தீவனம் கூட கிடைக்காத வகையில் இழப்பு ஏற்பட்டதாகவும், மீண்டும் தற்போழுது இரண்டாம் போக சாகுபடிக்கு நெற்பயிர் இடப்பட்டுள்ள நிலையில் தண்டுப்புழு நோயும் கழுத்துகுலை நோயும் நெற்பயிர்களை தாக்கி உள்ளதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் பயிரிடப்பட்ட 250 ஏக்கர் நெற்பயிர் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், பயிர்நடவு முதல் உரம், மருந்து, தெளிப்பு, ஆட்கூலி என ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் வரை செலவு ஆகியுள்ள நிலையில் இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்எனநோய் தாக்குதலுக்குஉள்ளான நெற்பயிர்களைகொண்டு வந்துவிவசாயிகள் குறைத்திருப்புகூட்டத்தில் விவசாயிகள்மாவட்ட ஆட்சியரிடம்கோரிக்கை விடுத்தனர்.