மங்கலத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் இளைஞர் அணி அமைப்பான முஸ்லீம் யூத் லீக் சார்பில், தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம் சட்டமன்ற தொகுதி தலைவர் முகமதுசா திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மங்கலம் நகர தலைவர் சாதிக்அலி, நகர செயலாளர் முகமதுரபி, நகர பொருளாளர் அஸ்கர் அலி, திருப்பூர் தெற்கு தொகுதி இளைஞர் அணி தலைவர் தாஹாநசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலியல் குற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.