அப்போது அங்கிருந்த மணிகண்டனிடம், அழைப்பை ஏற்காததை குறித்து குபேந்திரனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், குபேந்திரனைத் தாக்கினார்.
இதில் காயமடைந்த குபேந்திரன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்தனர்.