விழிப்புணர்வு பேரணியை திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் விஜயேஸ்வரம் துவக்கி வைத்தார். பல்லடம் சாலையில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இந்த பேரணியில் மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதே போல் மின்வாரிய ஊழியர்கள் மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியவாறு பங்கேற்றனர். வீடுகளில் மின் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த பேரணியில் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி செயற்பொறியாளர்கள். டேனிஷ் வேணு, மாரிமுத்து, விசுவலிங்கம், சார்லஸ், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.