திருப்பூரில்: ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு 10 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு

திருப்பூரில் வெயில் அதிகரித்து வெப்ப அலை காற்று வீசுவதின் காரணமாக அதிக வியர்வை ஏற்படுவதால் நீர் சத்து இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக கிட்னி பாதிக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்க்க பொது மக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 'ஹீட் ஸ்ட்ரோக்' சிகிச்சை பிரிவில் பொது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செயல்படுவார்கள். 

'ஹீட் ஸ்ட்ரோக்' சிகிச்சை குறித்து மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.பாதுகாப்புவெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வெளியில் செல்லும் பொதுமக்கள் எவ்வளவு வியர்வை வெளியேறுகிறதோ அதற்கு ஏற்றவாறு தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து இயற்கை பானங்களான இளநீர், பதநீர், நுங்கு மற்றும் நீர்மோர் உள்ளிட்டவற்றை அருந்தலாம். யாருக்காவது உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டால் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 'ஹீட் ஸ்ட்ரோக்' சிகிச்சைக்கான மருந்துகள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி