விசாரணையில் 63 வேலம்பாளையத்தைச் சேர்ந்த கவின்குமார் (வயது 35) என்பவர் விற்பனைக்காக பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கூரியர் மூலம் வரவழைத்துள்ளார். தொடர்ந்து தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கவின்குமார் தனக்குப் பழக்கமான பல்லடத்தைச் சேர்ந்த மருதாயி (27) என்பவரை புகையிலை பார்சலை எடுக்கச் சொல்லியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் கவின்குமார் மற்றும் மருதாயி ஆகியோரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது