திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருமுருகன் பூண்டி போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்ற வீரமணி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த வீரமணி (28) புகையிலைப் பொருட்களை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு சில்லறையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வீரமணியை கைது செய்து, அவரிடமிருந்து 37 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.