திருப்பூர் மாவட்டத்தில் 10 இடங்களில் 16 தேர்வு மையங்களில் குரூப்-1 தேர்வு நடைபெற்ற நிலையில் 4 ஆயிரத்து 303 பேருக்கு அறைகள் ஒதுக்கப்பட்டது. குரூப்-1 தேர்வு எழுத 3 ஆயிரத்து 202 பேர் வந்திருந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்து 101 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ. மோகன சுந்தரம் மற்றும் திருப்பூர் தெற்கு தாசில்தார் சரவணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தேர்வுகளை கண்காணிக்க 16 கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் 17 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குரூப்-1 தேர்வு எழுத தேர்வர்கள் காலை 9 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தேர்வு நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.