திருப்பூர் கரட்டாங்காடு என். பி. லே-அவுட்டில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அதிரடியாக சோதனையிட்டு, விபசார புரோக்கர்களான முகமது ரபிக் (29) மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கைது செய்தனர். இவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், வீட்டில் இருந்த பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.