இதுகுறித்து போலீசார் விசாரித்து ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்த ரஞ்சித் தன் மீது அந்தப் பெண் பொய் புகார் கொடுத்து விட்டதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித் திடீரென வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனை எடுத்து அவரது உடல் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடந்து முடிந்தது. இந்நிலையில் ரஞ்சித்தின் உறவினர்கள் உண்மை நிலையை விசாரித்து வழக்குப் பதிவு செய்யுமாறு கூறி ரஞ்சித்தின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் உடலை வாங்கிச் சென்றனர்.