பல்லடம்: மூன்று பேர் கொலை வழக்கு; குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சியாமலை கவுண்டம்பாளையம் பகுதியில் தேவசிகாமணி, அலமேலு, செந்தில்குமார் ஆகிய மூவர் மர்ம கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை விசாரணையில் குற்றவாளிகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் இதுவரை 500க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், ஏற்கனவே இருந்த 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தற்போது விசாரணை தீவிரமாக உள்ளதாகவும், குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி