திருப்பூர்: நடுரோட்டில் மிரண்டு அலப்பறை செய்த குதிரை (VIDEO)

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் சாலை வேலம்பாளையம் என்ற பகுதியில் நடுரோட்டில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக குதிரையை ஓட்டிச் சென்றார். அப்போது குதிரை மிரண்டு எதிரே வந்த அரசு பேருந்து மற்றும் கார்கள் மீது மோதச்சென்றது. இந்நிலையில் குதிரையை ஓட்டி வந்த வாலிபர் இழுத்துப் பிடிக்கவே ஆபத்தான நிலையில் தப்பித்து நடுரோட்டில் கட்டுப்பாடு இன்றி குதிரை மிரண்டது. இதனால் குதிரை செய்த அலப்பறை தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி