வெள்ளக்கோவில் அருகே மூலனூர் சாலை செந்தலையாம்பாளையம் பாசன கால்வாய் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சத்பால் (38) என்பவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 பாக்கெட்டுகள் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.