நிலையில் இன்று ரேக்ளா போட்டி நடைபெறும் இடத்தில் பல்லடம் நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கால்கோல் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்லடம் நகரத் தலைவர் ராஜேந்திரகுமார், பல்லடம் நகர திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு கால்கோலை நட்டனர். மேலும் பார்வையாளர்களுக்கு ஏதுவாக சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரேக்ளா போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு தங்க நாணயம், மற்றும் ஏராளமான பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு நாளை ரேக்களா கிளப் இணையதளத்தில் தொடங்க உள்ளது. நூறுக்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் இந்த போட்டியில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.