இத்துடன் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பப் படிவங்கள், நியாயவிலை கடையில் பணியாற்றும் நபர்களின் விடுப்புக் கடிதங்கள் போன்றவைகளும் வீசப்பட்டுள்ளன. குப்பைக் கிடங்கில் வீசப்பட்டுள்ள ரேஷன் அட்டைகள் காலாவதியானவையா அல்லது பொதுமக்களுக்கு புதிதாக வழங்குவதற்காக அச்சிடப்பட்டவையா என்பது குறித்து விசாரிக்க பல்லடம் வட்டாட்சியர் ஜீவா உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் குப்பைக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் அரசு அங்கீகாரமாகக் கருதப்படும் ரேஷன் கார்டுகள் குப்பைத்தொட்டியில் கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு