பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது பல்லடம் பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பனப்பாளையம், மாதபூர், கணபதிபாளையம், குங்குமம்பாளையம், சிங்கனூர், பெத்தாம்பாளையம், நல்லகவுண்டம்பாளையம், மாதேஸ்வரன் நகர், ராயர்பாளையத்தில் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது.