திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நால்ரோடு பகுதியில் ஏராளமான போக்குவரத்து உள்ள நிலையில் தற்பொழுது அரசு மருத்துவமனையை மறைத்து விளம்பரம் போட்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.