மடத்துக்குளம் அருகே போக்சோ வழக்கில் ஒருவர் கைது

திருப்பூர் மடத்துக்குளம் அருகே 14 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கணியூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இதே பகுதியைச் சேர்ந்த ஹரி செல்வன் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் ஹரி செல்வன் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி