மடத்துக்குளம்: அமராவதி ஆற்றுபாலத்தை பராமரிக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி ஆற்று பாலம் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த அமராவதி ஆற்று பாலம் தற்பொழுது சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. 

குறிப்பாக பாலத்தின் ஓடுதளம் மற்றும் பாலத்தை ஒட்டி ஆற்றின் கரைகள் உள்ள சீமை கருவேலாம் மரங்கள் தடுப்புச் சுவர்கள் அளவுக்கு உயர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் இரவு நேரத்தில் விபத்துக்கள் தவிர்க்க தேவையான எச்சரிக்கை பலகை வைக்கப்படாமல் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி