திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி ஆற்று பாலம் திண்டுக்கல் மாவட்ட எல்லைகள் உள்ளது. இங்கு ஏராளமான வாகனங்கள் தினமும் செல்கின்றன. பாதசாரிகளும் பாதயாத்திரை பக்தர்களும் அதிக அளவில் இதன் வழியாக செல்கின்றனர். ஆனால் இந்த பாலத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லை. இதனால் பாலத்தில் மின்விளக்குகளும் பிரதிபலிப்பான்களும் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.