மடத்துக்குளம்: கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க கோரி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கிருஷ்ணா புரத்தில் உள்ளது தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆன இந்த ஆலையை நம்பி மடத்துக்குளம் உடுமலை தாராபுரம் பழனி ஒட்டன்சத்திரம் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் கரும்பு பயிரிட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆலையில் உள்ள இயந்திரங்கள் பழுது காரணமாக அரவை நிறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விவசாயிகள் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் ஆலை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று மடத்துக்குளம் நால் ரோடு பகுதியில், சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டபடி இந்த ஆலையை புனரமைக்க அமைக்க நிதி வழங்க கோரி 500க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி