திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே திருமூர்த்தி அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 4 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது அணையில் 3-ம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. குறிப்பாக 34.59 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 732 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் செல்வதால் நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் முழுமையாக பயன்படுத்தும் விதமாக தூர்வாரும் பணிகளை முன்னதாக தொடங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்.