மடத்துக்குளம்: 100 இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், கணியூர் பேரூராட்சிப் பகுதியில், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி முன்னிலையில், மாற்றுக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். மடத்துக்குளம் மேற்கு, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியங்களுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த இணைப்பில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி