மடத்துக்குளம்: தீ விபத்தில் முதியவர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தில் 70 வயதான விஸ்வநாதன் என்ற முதியவர் 8 ஆண்டுகளாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாமல் தனது மகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் (ஜூலை 5) மதியம் இவர் வசித்து வந்த குடிசையில் தீப்பிடித்து மளமளவென பரவியது. இதில் விஸ்வநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மடத்துக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி