மடத்துக்குளம்: தென்னை மரங்களுக்கு தீ வைப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்புறத்தில் உள்ள ராஜவாய்க்கால் ஓரத்தில் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் பலமுறை வாய்க்கால் பகுதியை தூர்வாரக் கோரிக்கை வைத்துள்ளனர். நேற்று அமராவதி அணையில் இருந்து முதல் போகச் சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக வாய்க்கால் ஓரத்தில் உள்ள புதர்கள் சுத்தம் செய்யாமலும் தூர்வாரப்படாமலும் இருந்த காரணத்தால், தென்னை மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இதுசம்பந்தமாக கணியூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் நேரில் வந்த போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி