திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடபட்டியில், மனைவியை பிரிந்து வாழ்ந்த மணிகண்டன், குடிபோதையில் தனது தம்பி கோபிநாத் வீட்டிற்கு சென்று அவரது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில், கோபிநாத் பாட்டிலால் மணிகண்டனை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மடத்துக்குளம் காவல்துறையினர் கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.