திருப்பூர்: மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

காங்கேயம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 54). விசைத்தறி ஓட்டும் வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று வெள்ளகோவில் காங்கேயம் சாலையில் உள்ள ஓலப்பாளையம் கண்ணபுரம் பிரிவு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் (வயது 21) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி