உத்தரவு பெட்டிக்குள் என்ன பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறது அந்த பொருள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர் மறையாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம் என்பது ஐதீகம். மேலும் முருகப்பெருமான் பிறந்த விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று வைகாசி விசாகத் திருவிழா உலகம் முழுவதும் முருகன் ஆலயங்களில் வெகு விமர்சையாக விசாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்பேற்பட்ட இந்த சன்னதியில் இன்று (ஜூன் 10) சுப்பிரமணிய சுவாமிக்கு பால், மஞ்சள், தேன், பன்னீர், சந்தனம், திருநீறு, பல வகைகள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு அரோகரா கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். சிறப்பு அபிஷேக ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையும், கோவில் சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர்.