அந்த பேருந்து காங்கேயம் பேருந்து நிலையம் வந்தது. பேருந்தை சிறை பிடித்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் காங்கேயம் காவல்துறையினர் அங்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஹை கோர்ட் வக்கீல் கூறும்போது பஸ் நடத்துனர் பயணிகளும் கொடுத்த டிக்கெட்டில் 2008 ஆம் ஆண்டு என இருப்பதாகவும், இவ்வாறு தவறாக டிக்கெட் கொடுத்தால் ஒருவேளை பஸ் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த பயணி இறந்து விட்டால் சட்டரீதியாக இழப்பீடு கோர முடியாது எனவும் அந்த பேருந்து மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக இயக்குவதாகவும், எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதை அடுத்து சென்னை நீதிமன்ற வழக்கறிஞர் காங்கேயம் காவல் நிலையத்தில் தனியார் பேருந்து நிறுவனம் மீது புகார் அளித்தார். பின்னர் பேருந்து விடுவிக்கப்பட்டு பயணிகளை ஏற்றிகொண்டு சென்றது. இதனால் சிறிது நேரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.