பின்னர் மாலை 6 மணிக்கு பகவதி அம்மனுக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் இரவு 9 மணிக்கு பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இன்று 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மறு அபிஷேக பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
பல்லடம்
இருசக்கர வாகன விழிப்புணர்வு