இந்த விபத்தில் அரசு பேருந்தில் இடது புறம் நான்கு சீட்டில் உட்கார்ந்து வந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு வரும் வழியில் திருச்சி ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பவின் (6), கும்பகோணத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (50) என இருவர் பலியானார்கள்.
மேலும் இந்த விபத்தில் செந்தமிழ்செல்வன் (35), பாலசுப்பிரமணி (50), வீரம்மாள் (40), ஜெகதீஷ் (42), கிரிஷ் (14), முத்துலட்சுமி (40), செல்வி (45), சண்முகம் (45), சுதா (35), வள்ளிக்கண்ணு (46), மதிவாணன் (38) ஆகிய 12 பேர் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்து குறித்து வெள்ளகோவில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.