வெள்ளகோவில்: கோர விபத்து; சிறுவன் உட்பட 2 பேர் பலி

வெள்ளகோவில் அடுத்துள்ளது குருக்கத்தி. திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையாகும். இங்கு நேற்று முன்தினம் (ஜூன் 5) இரவு திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது குருக்கத்தி பகுதியில் கல்லக்குடியில் இருந்து டால்மியா சிமெண்ட் ஏற்றிக்கொண்டு கோவையில் இறக்குவதற்காக சென்ற லாரி ரோட்டில் எந்தவித சிக்னலும் போடாமல் நிறுத்தியிருந்ததால் பின்னால் வந்த அரசு பேருந்து லாரியின் வலது பின்புறத்தில் மோதியது. 

இந்த விபத்தில் அரசு பேருந்தில் இடது புறம் நான்கு சீட்டில் உட்கார்ந்து வந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு வரும் வழியில் திருச்சி ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பவின் (6), கும்பகோணத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (50) என இருவர் பலியானார்கள். 

மேலும் இந்த விபத்தில் செந்தமிழ்செல்வன் (35), பாலசுப்பிரமணி (50), வீரம்மாள் (40), ஜெகதீஷ் (42), கிரிஷ் (14), முத்துலட்சுமி (40), செல்வி (45), சண்முகம் (45), சுதா (35), வள்ளிக்கண்ணு (46), மதிவாணன் (38) ஆகிய 12 பேர் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்து குறித்து வெள்ளகோவில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி