காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி, டிஎஸ்பி மாயவன், நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த வேளையில் ஆத்திரமடைந்த விவசாயிகள் காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே இறந்த ஆடுகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்த வண்ணம் உள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.