ஈரோடு: கார் மோதி தூக்கிவீசப்பட்ட தொழிலாளி பலி; 2 பேர் காயம்

கோபி அருகே கார் மோதி தொழிலாளி பலி 2 பேர் காயம் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று கோபி-சத்திமெயின் ரோட்டில் உள்ள போடிசின்னம்பாளையம் அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த அன்பு (48) என்பவர் ஓட்டிவந்த கார் கணேசனின் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட கணேசன் படுகாயம் அடைந்து சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அன்பு, உடன்வந்த மோகன் (60) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவஇடத்துக்குச் சென்று கணேசனின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். காயம்அடைந்த அன்பு, மோகன் ஆகியோர் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி