ரூ100 மதிப்புள்ள மின் விளக்கு பொருத்த ரூ. 150 கூலி

தாராபுரம் தாலுகா குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொழுமங்குழி பஞ்சாயத்தில் அனுமதிக்கப்படாத மின்விளக்குகள் பொருத்தப்படுவதாகவும் அப்படி பொருத்தப்படும் விளக்குகளை முறையாக பொருத்துவதில்லை எனவும் இதனால் மின்விளக்குகள் கீழே கழன்று விழுகின்றன எனவும் இதனால் பாதைசாரி மக்கள் மீது விழும் அபாயமும் உள்ளது என்கின்றனர். 

கீழே விழும் விளக்குகளில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிர்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள். மேலும் இந்த விளக்குகளை ரூ. 100க்கு வாங்குவதாகவும் ஆனால் இந்த விளக்குகளை பொருத்துவதற்கு கூலியாக ரூ. 150 வழங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் அடிக்கடி இந்த விளக்குகள் கழன்று கீழே விழுவதால் ஒவ்வொரு முறையும் ரூ. 150 செலவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி