இதனிடையே விசாரணைக்காக மகாவிஷ்ணுவை, திருப்பூர் அடுத்த குளத்துப்பாளையம்பகுதியில் செயல்பட்டு வரும் பரம்பொருள் அலுவலகத்திற்கு சைதாப்பேட்டைபோலீசார் நேற்று(செப்.12) அழைத்துவந்தனர். அப்போது பரம்பொருள் அறக்கட்டளையில் வைத்து 5.30 மணிநேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணைமேற்கொண்டனர். அப்போது அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சென்று ஒவ்வொரு கோப்புகளாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் ஆவணங்கள், நன்கொடை வசூல், அறக்கட்டளை செயல்பாடுகள் குறித்து விசாரித்தனர். குறுகிய காலத்தில் வெளிநாடுகளில் கிளைகளை பரப்பியது எப்படி என்பது குறித்தும், மகா விஷ்ணுவுக்கு உதவியவர்களின் பட்டியல் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அலுவலகத்தில் இருந்த வங்கி சார்ந்த ஆவணங்கள் ஹார்டு டிஸ்க், லேப்டாப், பென்ட்ரைவ் ஆகியவற்றை விசாரணைக்காக பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
மகாவிஷ்ணுவை அழைத்த வந்த நிலையில் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகம் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.