தாராபுரத்தில் வீடு புகுந்து நகை திருட்டு

தாராபுரம் கொளத்துப்பாளையம் டவுன் பஞ்சாயத்து கரூர் ரோடு ராமபட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் வயது 32 தாராபுரத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3. 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது தாராபுரம் குற்றப்பிரிவு எஸ். ஐ. மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :