இந்தநிலையில் கன்னிவாடியில் உள்ள ஆட்டுச்சந்தையில் கடந்த 2 வாரங்களாக ஆடுகள் விற்பனை அதிகரித்து வருகிறது. நேற்று நடந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். மேலும் ஆடுகளும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. சுமார் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை ஆட்டுக்கிடாய்கள் விற்பனை ஆனது. மொத்தம் ரூ. 5 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை