ராஜு சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து பைக்கை எடுத்தபோது பைக்கின் முன் பகுதியில் தலையை நீட்டியபடி பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜு, பைக்கை அப்படியே விட்டுவிட்டு தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய பொறுப்பு அலுவலர் ராஜா ஜெயசிம்ம ராவ், தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பைக்கில் நுழைந்து கொண்ட பாம்பினை வெளியே எடுக்க முயற்சித்தனர்.
ஒரு மணி நேரம் போராடியும் பாம்பை பிடிக்க முடியவில்லை. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்தனர். பாம்பு வெளியே வந்தால் கூட்டத்தில் புகுந்து யாரையாவது கடித்து விடும் என்ற நோக்கில் தீயணைப்பு வீரர் பைக்கை தீயணைப்பு நிலையத்திற்கே எடுத்துச் சென்றார். பிறகு போராடி பைக்கின் அடி பாகத்தை கழட்டி அதில் ஒளிந்திருந்த பாம்பை லாபகரமாக பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.