வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அஇஅதிமுக திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் துர்க்கை அம்மன் கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக கட்சியினர் 800 பேர் கைது செய்யப்பட்டனர். அனுமதி மீறி திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற எம்எல்ஏவும் விமான சி. மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை 5 பேருந்துகளில் ஏற்றி அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர். மண்டபத்தின் அருகே 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு