ஊத்துக்குளி: வாகனம் மோதி வாலிபர் பலி

ஊத்துக்குளி அருகே உள்ள எஸ். காத்தாங்கண்ணி பாப்பம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37) இவர் செங்கப்பள்ளி அருகே சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் காங்கயம்பாளையம் பிரிவு அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரகாசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி