புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் கோவிந்தசாமியை துண்டு துண்டாக வெட்டி ரமேஷ் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக ரமேசை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ரமேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் கலெக்டர் கிறிஸ்துராஜிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ரமேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி ரமேஷ் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். அதற்கான உத்தரவு கோவை சிறையில் இருக்கும் ரமேசிடம் கொடுக்கப்பட்டது.