இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்ராவை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று வள்ளிபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு பெண்ணின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு வந்து அந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தவர் காணாமல் போன சித்ரா என தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.