குன்னத்தூர்: கிணற்றில் சடலமாக மிதந்த காணாமல் போன பெண்

குன்னத்தூர் குறிச்சி ஆயக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சித்ரா (வயது 43). இவர் கடந்த 10 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்ராவை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று வள்ளிபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு பெண்ணின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு வந்து அந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தவர் காணாமல் போன சித்ரா என தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி