லால்குடி வெடி வெடித்ததால் பக்தர்களை கொட்டிய தேனீ

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை நெடுஞ்சாலங்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மைக்கேல்பட்டி செல்லும் வழியில் உள்ள பங்குனி வாய்க்கால் தடுப்பணை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று 14ஆம் தேதி கரகம் பாலித்து சாமியாடிகளுக்கு உடுக்கடித்து அருள் அளித்து அக்னி சட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். 

அப்போது இளைஞர்கள் வைத்த வெடிசத்தத்தில் இருந்து கிளம்பிய புகை மரத்தில் இருந்த தேன்கூட்டில் பட்டது. இதையடுத்து தேனீக்கள் களைந்து அங்கு கூடியிருந்த பக்தர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் அவர்கள் நாளாபக்கமும் சிதறி ஓடினர். இதில் பெண்கள் முதியோர் உட்பட 25க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கடித்தது. பாதிக்கப்பட்ட அனைவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்ற நிலையில் ஐந்து பேர் மட்டும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி